Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக் கொண்டு உறவினர் திருமணத்துக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று ஊர் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ.1 லட்சம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் பக்தவச்சலம் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT