Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ‘நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை’ என்ற தலைப்பிலான ஒருநாள் பயிலரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் என்.நாகராஜன் வரவேற்றார். இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சூழலியல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் பாபுவினோத்குமார் அறிமுக உரையாற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜலட்சுமி தொடக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சத்தியமங்கலம் பிரிவு இயக்கக உதவிப் பேராசிரியர் ஏ.வள்ளியம்மை, நீர் மேலாண்மையில் தமிழரின் அறிவு, நிலத்தடி நீரை மேம்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு, விவசாயத்தில் நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன முறைகள், பண்ணைக்குட்டைகள் பயன்பாடு குறித்து விளக்கினார்.
மாவட்ட சூழலியல் ஒருங்கிணைப்பாளர் எஸ்.லோகாம்பாள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம், தொழில்நுட்பம், நீர் சேகரிப்பு விழிப்புணர்வு, இயற்கையின் சிறப்பை வளரும் தலைமுறைக்கு கற்பிப்பதன் மூலமாக ஏற்படும் அவசியம் குறித்து விளக்கினார்.
முனைவர் என்.செந்தில்குமார், ஐஎப்ஜிடிபி ஆய்வுகளில் இன்றைய நிலை, 48 வகையான நீராதாரங்கள், தமிழகத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள், அணைகள் நிலை, நீர் மேலாண்மை சிறப்பியல், தமிழர் வரலாறு, தமிழர்களின் நீர் சேமிப்பு முறை, ஆறுகளின் சிறப்பு குறித்து விளக்கினார். கல்லூரி இயற்பியல்பேராசிரியர் ரவி நன்றி கூறினார். இப்பயிலரங்கில் 4 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT