Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

செந்துறையில் மருத்துவ முகாம்

நத்தம்

நத்தம் அருகே செந்துறையில் புனித சூசையப்பர் பங்கு சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பங்குத் தந்தையர்கள் ஆரோக்கியம், ஜோசப்சேவியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவர்கள் ஜோனத்தன், பூபேஸ்ராஜா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். ஈ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் மேரிஜோசியா, ஒருங்கிணைப்பாளர் தெய்வீகபிரியா ஆகியோர் செய்திருந்தனர். செந்துறை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் பரிசோதனை செய்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x