Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

நாடாளும் மக்கள் கட்சியின் நாகை மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு

நாகப்பட்டினம்: நாகையில் உள்ள தனியார் விடுதியில், நாடாளும் மக்கள் கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் மு.கோபிநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜெ.அக்னிசெல்வராஜ், பொருளாளர் அ.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், நாகை மாவட்டச் செயலாளராக மயிலரசி கார்த்திகேயன், தலைவராக ஜி.சக்திவேல், பொருளாளராக கே.கருத்தபாண்டி, மீனவரணி செயலாளராக ஜெய்சங்கர், மகளிரணி செயலாளராக லோகேஸ்வரி தர்மராஜ், தொழில்நுட்பப் பிரிவு தலைவராக மகேஷ், மாணவரணி தலைவராக அருண்ராஜ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்து, மாநில தலைமைக்கு பரிந்துரை செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x