Published : 21 Feb 2021 03:18 AM
Last Updated : 21 Feb 2021 03:18 AM
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக கடந்த 5-ம் தேதி பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
‘‘ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுப்பூர்வமான போராட்டம். எனினும், இந்த போராட்டங்களின் போது, சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துவிட்டன. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க பல்வேறுவழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சட்டப்பூர்வமாகதிரும்பப் பெற முடியாத ஒரு சிலவழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளை அரசு திரும்பப் பெறும்’’ என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து,ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட 308வழக்குகளை திரும்ப பெறுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT