Published : 18 Feb 2021 03:17 AM
Last Updated : 18 Feb 2021 03:17 AM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டியும், ஆடவர் பிரிவில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடாலும் கால் இறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில்2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 5-ம் நிலை வீரரானகிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ்சிட்சிபாஸிடம் தோல்வியடைந்தார். அதேவேளையில் 4-ம் நிலைவீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் சகநாட்டைச் சேர்ந்தஆந்த்ரே ரூபலெவை தோற்கடித்து அரை இறுதியில் கால்பதித்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் முதல் நிலைவீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, கரோலினா மச்சோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT