Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன், துணைத் தலைவராக பிஹாரைச் சேர்ந்த பாபன் ராவத், உறுப்பினர்களாக கேரளத்தைச் சேர்ந்த அஞ்சனா பவார், டெல்லியைச் சேர்ந்த பி.பி.வாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் மா.வெங்கடேசன், பாஜக எஸ்.சி. அணி மாநிலத் தலைவராக இருந்தவர். எழுத்தாளரான இவர், `இந்துத்துவ அம்பேத்கர்’, `எம்ஜிஆர் என்கிற இந்து' `அம்பேத்கர் புத்தம் மதம் மாறியது ஏன்?', தலித்களுக்கு பாடுபட்டதா நீதிக் கட்சி?’, `பெரியாரின் மறுபக்கம்' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT