Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM

நாமக்கல்லில் அஞ்சல் துறை சார்பில் நாளை வரை ஆதார் திருத்த முகாம்

நாமக்கல்: நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சார்பில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நாளை (19-ம் தேதி) வரை நடைபெற உள்ளது, என அஞ்சல் கண்காணிப்பாளர் பா. முருகேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:

நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அஞ்சல் துறை சார்பில் நாளை (19-ம் தேதி) வரை ஆதார் திருத்தம் தொடர்பான சிறப்பான முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுத்தல். ஏற்கெனவே எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி சேர்த்தல் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

இதில் புதிதாக ஆதார் அட்டை எடுக்க கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. 5 வயது மற்றும் 15 வயது முடிந்து தங்களின் கைரேகை மற்றும் கண் கருவிழிகளை புதிதாக பதிவு செய்பவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. மற்ற வயதினர்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி சேர்த்தல் போன்ற திருத்தம் செய்பவர்கள் ரூ.50 செலுத்தி தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி திருத்தம் செய்ய துணை ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. பிற திருத்தங்களை மேற்கொள்பவர்கள் தகுந்த ஆவணங்களை கொண்டுவரவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x