Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் பைடன் பேச்சு மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது தடை அறிவிப்பு

மியான்மரில் ராணுவ புரட்சியை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவ அதிகாரிகள் மீது தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதனால் அமெரிக்கா அளிக்கும் 100 கோடி டாலர் மதிப்பிலான உதவித் தொகையை ராணுவ ஆட்சியாளர்கள் பெற முடியாது.

மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்கள் மீது பல்வேறுகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமானது அமெரிக்கா அளிக்கும் 100 கோடி டாலர் மதிப்பிலான உதவிகளை அவர்கள் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகும். தங்கள் சுயநலனுக்காக ராணுவ புரட்சியை மேற்கொண்ட ராணுவ அதிகாரிகள் அமெரிக்க அரசின் நிதி உதவியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அதிபர் தெரிவித்தார்.

இந்த வார தொடக்கத்தில் முதல் சுற்று பொருளாதார தடையாக மியான்மருக்கான ஏற்றுமதி மீது தடை விதிக்கப்பட்டன. அதேபோல சிறைபிடிக்கப்பட்ட அதிபர்யு வின் மின்ட், ஆங் சான் சூகி ஆகியோரை விடுவிக்குமாறும் அமெரிக்கா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவர்களிருவரும் பிப்ரவரி 1-ம் தேதி ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

ஹாங்காங் மீது தொடர்ச்சியாக சீனா மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகள் மிகுந்து வருத்தம் அளிப்பதாக சீன அதிபர்ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார். அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேசமயம் சீனாவின் புத்தாண்டுதினத்துக்கு அதிபர் ஜோ பைடன்சீன மக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். தைவான் மீதும் இத்தகைய மறைமுக பொருளாதார நெருக்குதலை சீனாவிதிப்பதற்கு தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x