Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

ஆன்லைனில் பதிவு செய்தால் வீட்டுக்கு வரும் பழநி பஞ்சாமிர்தம் பிப். 15-ம் தேதி முதல் பதிவு செய்யலாம்

பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயில் பஞ்சாமிர்தம், ஆன்மிக அன்பர்களால் பெரிதும் விரும்பப் படும் பிரசாதமாகும்.

இந்த பழநி பஞ்சாமிர்தத்தை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கான திட்டத்தை இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனாதொற்று காரணமாக, கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கோயில்களில் பக்தர்களின் வருகை குறைவாகவே உள்ளது. பக்தர்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் இந்து அறநிலையத் துறை மற்றும் பழநி கோயில் நிர்வாகம், இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து பழநி கோயிலின் பிரசித்திபெற்ற பிரசாதமான பஞ்சாமிர்தத்தை பக்தர்கள் வீட்டில் இருந்தே பெறும் திட்டத்தை தொடங்கிஉள்ளது. இதன்படி பழநி கோயில்பிரசாதத்தை பெறுவதற்கு www.tnhrce.gov.in என்றஇணையதளத்திலோ, அஞ்சல் நிலையங்களிலோ ரூ.250 செலுத்தி பதிவு செய்தால் அரைகிலோ பஞ்சாமிர்தம், சுவாமி ராஜ அலங்காரப் புகைப்படம், விபூதிஆகியவை அஞ்சல் துறை மூலம்வீ்ட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.

பதிவுசெய்த அடுத்த நாளே..

இந்தத் திட்டம் வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்த அடுத்தநாளே பழநி கோயில் பிரசாதத்தை பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x