Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

தமிழகத்தில் 469 பேருக்கு கரோனா சிகிச்சையில் 4,328 பேர்

சென்னை

தமிழகத்தில் புதிதாக 469 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 302, பெண்கள் 167 என மொத்தம் 469 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 139 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 42,730 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 26,011 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 491 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். மாநிலம் முழுவதும் தற்போது 4,328 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் 4 பேர்உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,391 ஆக உயர்ந்துள்ளது. 254 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 64 லட்சத்து 91,030 பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று மட்டும் 51,174பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் 4 பேர் நேற்றுஉயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,391 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x