Published : 06 Feb 2021 03:17 AM
Last Updated : 06 Feb 2021 03:17 AM

கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவம் ஆலோசனைக் கூட்டம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் விரைவில் தொடங்கவுள்ளதால் உற்சவத்தை காணவரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்வது தொடர்பாக, அனைத்து அரசுத் துறையினரின் ஆலோசனைக் கூட்டம், செங்கை கோட்டாட்சியர் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருப்போரூர் மாடவீதி சாலைகளை சீரமைத்தல், பக்தர்களுக்கான குளியல், கழிப்பறை பராமரிப்பு, குடிநீர் வசதி மற்றும் பேருந்து வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க பேரூராட்சிக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், தேரோட்ட உற்சவத்தை கருத்தில் கொண்டு மாடவீதிகளில் தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x