Published : 05 Feb 2021 03:17 AM
Last Updated : 05 Feb 2021 03:17 AM
மதுரை நாராயணபுரம் மந்தையம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களிடமிருந்து 19 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தல்லாகுளம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் ரவி தலைமையிலான தனிப் படையினர், நகை திருட்டில் தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர். கோவை மாவட்டம், துடியலூரைச் சேர்ந்த ஜெயந்தி(55), திவ்யா(25), அமுதா(27), திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா(33) ஆகியோரை கைது செய்த போலீஸார், 16 பவுன் நகைகளை மீட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT