Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM

புதிதாக 510 பேருக்கு கரோனா தொற்று முதியவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 510 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 306, பெண்கள் 204 என மொத்தம் 510 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 142 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 39,352 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 25,869 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 22,468 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 140 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 521 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4,517 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதியவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,367 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,110 பேர் இறந்துள்ளனர்.

சென்னையில் 2 லட்சத்து 31,563, கோவையில் 54,500, செங்கல்பட்டில் 51,607, திருவள்ளூரில் 43,594 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 253 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே61 லட்சத்து 23,270 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 51,644 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x