Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க ரூ.2 லட்சம் நிதி

தமிழில் கருத்தாழமிக்க அரிய கலை நூல்களைப் பதிப்பிக்க நூல் ஆசிரியர்களுக்கு நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிவழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கலை சார்ந்தநூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், கருத்தாழமிக்க அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க, நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் திட்டத்தை, தமிழ்நாடு இயல் இசைநாடக மன்றத்தின் மூலம் நிறைவேற்ற அரசு ஆணையிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை, உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம்,31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 28, தொலைபேசி 044-24937471, மின்னஞ்சல் tneinm@gmail.com,tneinm@tn.gov.in என்ற முகவரிக்கு 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x