Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

மனைவியின் தம்பியை கொலை செய்தவர் கைது

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கனகரத்தினம். இவரது மனைவி அனுசுயா. இந்நிலையில், அனுசுயாவின் தம்பி பழனிராஜா(31), அக்கா வீட்டில் தங்கியிருந்து, கட்டிட வேலைக்குச் சென்றார். நேற்று முன்தினம் இரவு மது அருந்திய நிலையில்வீட்டுக்கு வந்த கனகரத்தினம், மனைவி அனுசுயாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பழனிராஜா தட்டிக் கேட்கவே, இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கனகரத்தினம், வீட்டிலிருந்த கத்தியால் பழனிராஜாவைக் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த பழனிராஜா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வால்பாறை போலீஸார், கனகரத்தினத்தை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x