Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

3 மாதங்களில் உடைந்த தளவானூர் தடுப்பணை ஒப்பந்ததாரரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்

தென்பெண்ணையாற்றில் தடுப்பணை உடைந்தது தொடர்பாக அதன் ஒப்பந்த தாரரைக் கைது செய்ய வலியுறுத்தி பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் உத்ராபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில் தளவானூர் தடுப்பணை உடைந்துள்ளதால், ஒப்பந்ததாரரின் சொந்த செலவில் அதை சீர்மைப்பதோடு, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவேண்டும், ஒப்பந்ததாரரைக் கைது செய்ய வேண்டும்என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகரத் தலைவர் சக்திவேல், உதயக்குமார், மாதவன், சிவக்குமார், மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x