Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

மேலூர் அருகே இரு வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

மேலூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரை அருகே நாகனாகுளத்தைச் சேர்ந்தவர் ஆதினமிளகி (70). இவர் தனது உறவினர் பிரகாஷ் (32) என்பவருடன் பைக்கில் ஜன.27-ல் மேலூர் பகுதிக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பினார்.

நான்கு வழிச் சாலையில் தெற்குத் தெரு அருகே எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஆதினமிளகி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக மேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மேலூர் அருகிலுள்ள ஏ.வெள்ளாளபட் டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(29). நேற்று முன்தினம் அழகர் கோயில் - மேலூர் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, சண்முகநாதபுரம் அருகே அவ் வழியாக சென்ற வேன், அவர் மீது மோதி யது.

படுகாயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வேன் ஓட்டுநர் கீழையூரைச் சேர்ந்த ஜெயராமனை மேலவளவு போலீ ஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x