Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப் பபன் தெரிவித்தார்.
பரமக்குடியில் முன்னாள் அமைச்சரும், திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலை வருமான ராஜ கண்ணப்பன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சசிகலா விடுதலை ஆனதோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறந்த திலோ எந்தவொரு அரசியல் முக்கியத்துவமும் இல்லை. தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என அதிமுக அமைச்சர்களும், அனைத்து எம்எல்ஏக்களும் பேசி வருகின்றனர். தற்போது அதிமுகவை விட திமுகவுக்கு கூடுதலாக 25 சதவீத வாக்கு வங்கியுள்ளது. அதனால் ஸ்டாலின் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டு அமோக வெற்றி பெறும். அதிமுக - அமமுக இடையே கூட்டணி ஏற்பட்டாலும் திமுகவுக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT