Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM
பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடியாக நீட் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
7.5 சதவீத உள்ஒதுக்கீடு அமலில்இருப்பதால் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற மாணவர்களை தயார் செய்வது அவசியமாகிறது.
தவிர, இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அது நேரடி பயிற்சிக்கு இணையாகாது. அதனால் மாணவர்களுக்கு நேரடியாகநீட் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சிறந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு தினமும் மாலையில் பள்ளி முடிந்த பிறகு ஒரு மணி நேரம் கூடுதலாக பயிற்சி அளிக்கவும், வார இறுதியில் குறுந்தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT