Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

காவலாளியை தாக்கி மதுபாட்டில்கள் கொள்ளை

விருதுநகரில் பி.ஆர்.சி. பாலத்தின் கீழ் பைபாஸ் சாலை அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதன் அருகே பாரும் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பார் காவலாளி விருதுநகர் சிவன் கோவில் மேலத் தெருவைச் சேர்ந்த மோகன் மூர்த்திராஜன் (59) என்பவரை, 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத 4 பேர் கத்தியால் தலையில் தாக்கினர்.

பின்னர், கடையின் பூட்டை உடைத்து ஏராளமான மது பட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர். காவலாளி மோகன் மூர்த்திராஜன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விருதுநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x