Published : 25 Jan 2021 03:16 AM
Last Updated : 25 Jan 2021 03:16 AM
அரியலூர்: அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், கேடயம் திட்டம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பெண் குழந்தைகள் வருங்காலத்தில் சாதனைப் பெண்மணிகளாக உருவாக வேண்டும் என்ற வழிகாட்டுதலை ஏற்படுத்தும் விதமாகவும், பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் வாணி மற்றும் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஏராளமான பெண் குழந்தைகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT