Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உடல்நிலையில் முன்னேற்றம் ரிம்ஸ் மருத்துவமனை தகவல்

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சிநிறுவனருமான லாலு பிரசாத்தின் உடல்நிலை, அண்மை காலமாகவே பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அவருக்கு திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கடுமையான நுரையீரல் தொற்றுஏற்பட்டிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பலனாக, நேற்றுகாலை முதலாக அவரது உடல்நிலை சீராக தொடங்கியது.

அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பதும் தெரியவந்தது. லாலு பிரசாத்தை அவரது மனைவி ராப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் நேற்று மருத்துவமனையில் சந்தித்து பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x