Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

சுரப்பா மீதான விசாரணை உரிய காலத்துக்குள் முடிக்கப்படும்:ஆணைய தலைவர் தகவல்

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான ஆணையம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆணையத்தின் தலைவர் கலையரசன் கூறியபோது, ‘‘துணைவேந்தர் சுரப்பா மீதான ஊழல் புகார்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆவணங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் சுரப்பாவை நேரடி விசாரணைக்கு அழைப்பது பற்றி பிப்ரவரி முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும். அரசு வழங்கிய காலஅவகாசத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x