Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

காரில் ரூ.90 லட்சம் கைப்பற்றப்பட்ட விவகாரம் அமலாக்கத் துறை சிறப்பு அதிகாரி விசாரணை

கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்சலாம்(50). ரியல் எஸ்டேட் அதிபர். இவரும், கார் ஓட்டுநர் சம்சுதீனும் கடந்த 24-ம் தேதி கோவையில் இருந்து பாலக்காடு செல்லும்போது, நவக்கரை அருகே மர்ம நபர்கள் இருவரையும் தாக்கி காரை திருடிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீஸார்வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சில தினங்களுக்கு பின்னர், கார் மீட்கப்பட்டு, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.90 லட்சம் கைப்பற்றப்பட்டது. அது கணக்கில் வராத தொகை எனத் தெரியவந்தது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கூறும்போது, ‘‘கார் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.90 லட்சம் தொகை கைப்பற்றப்பட்டது தொடர்பாக முதலில் வருமான வரித் துறையினர் விசாரித்தனர். தற்போது அமலாக்கத் துறையினர் விசாரிக்க உள்ளனர். இதற்காக ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x