Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

ஒரு வயது குழந்தை மர்மமாக உயிரிழப்பு

பெண்ணாடத்தை அடுத்த மாளிகை கோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிவண்ணன்- சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு வயதில் இரணியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன் தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது.

பதறிப்போன பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் குழந்தையை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிசிடிவி கேமரா மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நேற்று முழுவதும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள பாசன வாய்க்காலில் நேற்று காலை குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. குழந்தையின் மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x