Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு பாறாங்கற்கள் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த மினி லாரி அதன் மீது வேகமாக மோதியது. இதையடுத்து பின்னால் வந்த ஒரு வேன் உள்ளிட்ட 2 வாகனங்கள் லாரி மீது மோதின. இதில் லாரியில் இருந்த பாறாங்கற்கள் வாகனங்கள் மீது சரிந்ததில் அவற்றில் இருந்தவர்கள் பாறாங்கற்களுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிரேன் மற்றும் ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்றது. இதில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT