Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. பிப். 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று கூறும்போது, “வரும் 30-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் காணொலி மூலம் நடைபெறும். இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இக்கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி நிரல் குறித்து அரசு சார்பில் எடுத்துரைக்கப்படும். அதேநேரம் எதிர்க்கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் கேட்கப் படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT