Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

ஜம்முவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது

ஜம்மு: ஜம்முவில் நேற்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜம்முவின் அக்னூர் செக்டார், கெரி பட்டால் பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவில் அதிக ஆயுதங்கள் தாங்கிய 5 தீவிரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இடைமறித்தனர். இதையடுத்து இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்ற இருவர் திரும்பிச் சென்றிருக்கலாம் அல்லது அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என கருதுகிறோம். இதன் அடிப்படையில் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மோதலில் 4 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த ராணுவ அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x