Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
விருகம்பாக்கம் ஏகாம்பரம் தெருவில் உள்ள நவசக்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜன.24-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, பல்வேறு ஹோமம், பூஜைகள் நடைபெறும்.
25-ம் தேதி காலை 8:30 மணியளவில் விநாயகர் பூஜை, கோ பூஜை, பிம்ப சுத்தி, ரக் ஷபந்தனம் செய்யப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெறும்.
காலை 9:30 மணிக்கு கலச கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு விநாயகர் திருக்குடமுழுக்கு நடைபெற்று, 10 மணிக்கு தீபாராதனை, 12 மணிக்கு அன்னதானம், மாலை 7 மணிக்கு விசேஷ சந்தனக் காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறும்.
சட்டப்பேரவை உறுப்பினர் வி.என்.விருகை ரவி, கோயில் நிறுவனத் தலைவரும் வடபழனி முருகன் கோயில் குருக்கள் சட்ட ஆலோசகருமான முருகன், லலிதாம்பிகை சுவாமி துரை சிங் ஆச்சாரியார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT