Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ்(40). இவர், இளையரசனேந்தலில் இருந்து திருவேங்கடத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். முக்கூட்டுமலை கிராமம்பகுதியில் திடீரென நிலைகுலைந்த மோட்டார் சைக்கிள், சாலையோர மரத்தில் மோதியது. கீழே விழுந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கழுகுமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி வேலாயுதபுரம் ரயில்வே கேட் அருகேயுள்ள தண்டவாளத்தில் இளைஞர் உடல் கிடந்தது. இறந்து கிடந்த இளைஞருக்கு சுமார் 35 வயதிருக்கும். நீல நிற முழுக்கை டி-சர்ட், வெள்ளை நிறத்தில் கால் சட்டை அணிந்திருந்தார். எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT