Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

‘பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில்மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு’

திருப்பூர்: கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தில் அமைந்துள்ள சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 400 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் எளிதில் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x