Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

அரியலூர் அரியலூர், தேளூர் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் இன்று (ஜன

அரியலூர்

அரியலூர், தேளூர் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இத்துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பொ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி

திருச்சி திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு, தெற்கு உள் வீதிகள், ஒத்தத் தெரு, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கர் சாலை, பஞ்சக்கரை சாலை, ஏயுடி நகர், காந்தி சாலை, டிரங்க் சாலை, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், எம்.கே.பேட்டை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழ மற்றும் நடுக் கொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணெய்நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டார் கோவில் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட டோல்கேட், பிச்சாண்டார் கோவில், மாருதி நகர், கோகுலம் காலனி, வி.என்.நகர், ராஜா நகர், ஆனந்த் நகர், ராயர் தோப்பு, தாளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x