Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

பொங்கல் பொருட்கள் வியாபாரம் பாதிப்பு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் செடி, காய்கறிகள், பச்சரிசி, வெல்லம், சீர்வரிசைப் பொருட்கள் வியாபாரம் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே களைகட்டும். ஆனால், இந்த ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் மழை பெய்து வருகிறது. இதனால், பொருட்களை வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த கரும்பு கட்டுகள், மஞ்சள் செடி, பனை ஓலை, கோலப்பொடி, பனங்கிழங்கு உள்ளிட்டவை மழையில் நனைந்து சேதமடைந்தன. தொடர் மழையால் பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகளை சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x