Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது அதிகரிப்பு அஞ்சல் அதிகாரிகள் தகவல்

கோவை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில ஆண்டுகளுக்கு முன்புவரை அஞ்சல் மூலம் வாழ்த்து அட்டைகள் அதிக அளவில் அனுப்பிவைக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வாழ்த்து அட்டைகள் அனுப்புவது குறைந்தது.

இந்நிலையில், நடப்பாண்டு வாழ்த்து அட்டைகள் அனுப்புவது அதிகரித்துள்ளதாக அஞ்சல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை கோட்ட அஞ்சல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த வாரம் முதலே அஞ்சல் நிலையங்கள் மூலம் வாழ்த்து அட்டைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள் கோவை அஞ்சலம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. நடப்பாண்டு தற்போதே வாழ்த்து அட்டை அனுப்புவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி விட்டது. தொழில் நிறுவனத்தினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மொத்தமாக வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்றனர். வெளியூர்களுக்கு சாதாரண அஞ்சலுக்கு ரூ.4, பதிவு அஞ்சலுக்கு ரூ.22, விரைவு அஞ்சலுக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூட்ஸ் ஷெட் சாலை, ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையங்களில் மொத்தமாக வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படுகின்றன" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x