Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

கரோனா தடுப்பூசி ஜி.கே.வாசன் கோரிக்கை

நாட்டில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிடைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட கரோனா தடுப்பு பணிகள், மக்கள் மத்தியில் நல்ல பயனளித்துள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்துவது வரவேற்கத்தக்கது. அத்துடன் நாட்டிலுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிடைத்து கரோனா நம் நாட்டில் இனி பயம் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் வரும் 16-ம் தேதி தொடங்கி வைப்பதும், அதேநாளில் தமிழக முதல்வர் பழனிசாமியும் தொடங்கிவைப்பதும் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடும், தமிழகமும் வெற்றி பெற்று கரோனாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வாழ வழிவகுக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x