Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

சட்டப்பேரவையில் அமைச்சர் 3-வது நாளாக போராட்டம் தர்ணாவை முடித்துக்கொள்ள புதுவை முதல்வர் அறிவுறுத்தல்

தனது துறையில் 15 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவும், ஆளுநரை சந்திக்க அனுமதிக் கவும் கோரி புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி சட்டப்பேரவையில் நேற்று 3-வதுநாளாக உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டுள்ளார்.

முதல்வர் நாராயணசாமி இது பற்றி கூறுகையில் “அமைச்சரின் கோரிக்கைகள் நியாயமானவை. சில கோப்புகள் என்னிடம் வரவுள்ளன. கோப்புகளில் முடிவுஎடுக்க சில நாட்கள் ஆகும். அமைச் சர் தர்ணாவை முடித்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

அமைச்சர் கந்தசாமி கூறுகையில், “ஆளுநர் கிரண்பேடி உத்தரவின் பேரில் நிதிசெயலர் பல திட்டங்களைத் தாமதப்படுத்துகிறார்.இதுபற்றி குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி யுள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x