Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

முதல்கட்ட மாதிரி வாக்குப்பதிவு: பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நேற்று நடைபெற்ற பரிசோதனை முறையிலான முதல்கட்ட மாதிரி வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது: பெரம்பலூர் வருவாய் கோட்ட சார் ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் 1,072 , வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1,414, வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் 1,162 என மொத்தம் 3,648 இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்களில் பெல் நிறுவன பொறியாளர்களைக் கொண்டு முதல்கட்ட சரிபார்ப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இவற்றில் 1,409 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,039 கட்டுப்பாட்டு கருவிகள், 1,108 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் என மொத்தம் 3,556 நல்லமுறையில் செயல்படும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 52 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 52 கட்டுப்பாட்டு கருவிகள், 52 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான மாதிரி வாக்குகள் சரிபார்க்கப்பட்ட பின்னர், மாதிரி வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்படும் என்றார். இந்நிகழ்வில், சார் ஆட்சியர் ஜே.இ.பத்மஜா, வட்டாட்சியர் பாரதிவளவன் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x