Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
சாலையோர பூங்கா மற்றும் இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு, நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பானது புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.
நாகர்கோவிலில் அதிகமான மக்கள் வந்து செல்லும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக வேப்பமூடு சந்திப்பு உள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அங்கிருந்த போக்குவரத்து கழக மருத்துவமனை கட்டிடத்தை மாநகராட்சி முன்னாள் ஆணையர் சரவணகுமார் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டார். இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி ஓரளவு சீரானது.
மேலும், இப்பகுதியில் இருசக்கர வாகன பார்க்கிங் மற்றும் சாலையோர பூங்கா அமைக்க நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு 4 பிரிவுகளாக பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம்சாலையோர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அமர்ந்து இளைப்பாறும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள் ளன. அத்துடன் பூங்கா பகுதியில்நிழல் தரும் மரங்களை நடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேப்பமூடு சந்திப்பில் நெரிசலை குறைத்து, சாலையோர பூங்காவுடன் இருசக்கர வாகன பார்க்கிங்கும் அமைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT