Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 107 அடியை கடந்துள்ளது.
தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், தி.மலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்கிறது. அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,250 கனஅடி தண்ணீர் வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 107.45 அடியாக உள்ளது. அணையில் 4,964 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
60 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 47.89 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 38 கனஅடி தண்ணீர் வருகிறது. அணை பகுதியில் 441 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 4.59 அடியாக உள்ளது. அணையில் 13 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
மேலும், 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 58 அடியாக தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு வரும் 50 கனஅடி தண்ணீரும், அணையின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுகிறது. அணையில் 242 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT