Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், விழாவை தொடங்கி வைத்ததுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘‘தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் மன இறுக்கம் விலகி மகிழ்ச்சியுடன் இருக்க உதவுகிறது. குடும்ப விழாவில் கலந்துகொண்டது போல் மன நிறைவாய் இருக்கிறது. அனைவரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார். பொங்கல் விழாவையொட்டி பானை உடைத்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கோலமிடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT