Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடக்கம்

வண்டலூர்: வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத் தரகர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் பல்வேறு பணிகளை செய்து தருவதாகக் கூறி இடைத்தரகர்கள் அதிகரித்துள்ளதாகவும், அரசு ஆவணங்களை தனி நபர்கள் கையாள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே, இந்த அலுவலக ஊழியர்களின் செயல்பாடுகள், இடைத்தரகர்கள் மற்றும் தனிநபர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x