Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
புதுவை மாநிலத்தின் போலீஸ் டிஜிபியாக பாலாஜி வத்சவா பதவி வகித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் பாலாஜி வத்சவா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக டெல்லியில் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி ரன்வீர் சிங் கிருஷ்ணியா புதுவை போலீஸ் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். புதிய டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணியா புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்றார். முன்னாள் டிஜிபி பாலாஜி வத்சவா பொறுப்புகளை அளித்தார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ரன்வீர் சிங் கிருஷ்ணியா, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT