Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

காப்பக குழந்தைகளுக்கு பொங்கல் பரிசு மதுரை கூடுதல் எஸ்பி வனிதா வழங்கினார்

இதையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள், புத்தாடைகளை மதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா வழங்கினார். இல்லச் சிறுமிகள் பொங்கல் வைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினர். மற்றொரு இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும் பொங்கல் பரிசு, அக்குழந்தைகளின் குடும்பத்தினருக்குச் சமையல் பொருட்களை கூடுதல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், குழந்தைகள் நலக்குழு தலைவர் விஜயசரவணன், உறுப்பினர்கள் பாண்டியராஜா, சாந்தி , மகளிர் காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியா பாய், பேர்ட் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x