Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு கரோனா தொற்று காரணமாக ரத்தான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம், வரும் 18-ம் தேதி முதல் கோவையில் நடக்க உள்ளது.
இதுதெரடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெறுவதாக அறிவிக் கப்பட்ட ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், கரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில், வரும் 18-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோயமுத்தூர் மாவட்டம் பாரதியார் பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது.
இம்முகாமில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பத்தூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். ராணுவத்தில் காலியாக உள்ள தொழில்பிரிவு, உதவி செவிலியர், கால்நடை பராமரிப்பு உதவி செவிலியர், எழுத்தர், பொருட்கள் பாதுகாவலர் ஆகிய பணியிடங்களுக்கு இம்முகாமில் ஆள்சேர்ப்பு நடக்க உள்ளது.
ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் www.joinindianarmy என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டில் குறிப்பிட்ட தேதியில் மட்டுமே தவறாமல் பங்கேற்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள முடியும். ‘ஆர்மி ரெக்ரூட்மென்ட் அலுவலகம், கோயமுத்தூர் ரிப்போர்ட் சென்டர்’ என்ற முகவரியில் அல்லது 0422-2222022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறியலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT