Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை

அரியலூர்

அரியலூரில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜெகதீசன்(50). இவர், தா.பழூரில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு ராதா என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்ட நிலையில், ஜெகதீசன் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து தா.பழூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x