Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
திருச்சி: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேற்று திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். துறையூர் பாலக்கரை பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பைகளை வழங்கிய பின்னர் அவர் பேசும்போது, ‘‘வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் தலைவர் விஜயகாந்த் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்’’ என்றார்.
இதேபோல மண்ணச்சநல்லூர், திருவெள்ளரை, புலிவலம், கரட்டாம்பட்டி பகளவாடி, கொத்தம்பட்டி, கண்ணனூர், தாத்தையங்கார்பேட்டை, சக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவர் சென்று பொங்கல் பரிசு பைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர்கள் திருச்சி வடக்கு குமார், திருச்சி தெற்கு கிருஷ்ணகோபால், பெரம்பலூர் துரை.காமராஜ், கரூர் தங்கவேல், மாநில மாணவரணி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜய்குமார், மாநில தொண்டரணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, மாநில மாற்றுத்திறனாளிகள் அணி துணைச் செயலாளர் வாஞ்சி குமாரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT