Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆட்சியர் சிவன் அருள் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை 3 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதையொட்டி இயங்கி வரும் மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்துள்ள உணவகங் களில் இயங்கி வரும் மதுபான பார்கள் வரும் 15-ம் தேதி (திருவள்ளுவர் தினம்), வரும் 26-ம் தேதி (குடியரசு தினம்), வரும் 28-ம் தேதி (வள்ளலார் நினைவு தினம்) ஆகிய 3 நாட்களுக்கு மூட வேண்டும்.

இந்த 3 நாட்களில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும், அதையொட்டி இயங்கி வரும் மதுபான பார்களும் மூடாமல் திறந்து மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தால் கடையின் கண்காணிப்பாளர், விற்பனை யாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், மதுபான பார்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் பார் உரிமையாளர்கள் மீதும் குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x