Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM

மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். கொள்கை விளக்க அணி செயலாளர் க.அழகுசுந்தரம் கலந்துகொண்டு புதிய ஒன்றிய செயலாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ், நகர செயலாளர் எஸ்.பால்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம்.பவுன் மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.தெய்வேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண் டும். கோவில்பட்டி வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x