Published : 10 Jan 2021 03:30 AM
Last Updated : 10 Jan 2021 03:30 AM
திருவண்ணாமலை: தி.மலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள கடைகளில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அரவிந்த் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. மளிகைக் கடை, காய்கறி கடை, உணவகங்கள், பழக்கடை உள்ளிட்ட கடைகளில் ஆய்வு செய்தபோது, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT